2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தவெகவுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என, பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யை இன்னும் விமரிச்க்க ஆரம்பிக்கவில்லை,த.வெ.க.விற்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை என தெரிவித்தார்.
“2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்பேன் என்றும். விஜய்யின் பேச்சு ஆழம் நிறைந்த ஒன்றாக சிந்திக்க வைக்கும் விதமாக இல்லை என்றும் அவர் சாடினார்.
கட்சியினரை கைத்தட்ட வைக்கும் விதமாக மட்டுமே விஜய் பேசுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளரை எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
2 அமைச்சர்களின் ஈகோவால் புகழ்பெற்ற மதுரை நகரம் குப்பை நகரமாக மாறியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
















