தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங். உள்ள ஒரே காரணத்தினால், மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சூழல் இருப்பதாகவும்,
எனவே, காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.
காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாகவும்,
அவர்களாக வெளியேறினால் வெளியேறட்டும் என்று அமைச்சர்களுக்கு பதிலளித்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கூட்டணியை உறுதி செய்வதற்காக ராகுல் காந்தியை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து கனிமொழி பேச்சுவார்த்தை நடத்திய சூழலில்,
கூட்டணி இதுவரை உறுதியாகாததால் தொகுதி பங்கீடுக்கான வேலையை தொடங்க முடியாத இக்கட்டான சூழலில் திமுக சிக்கி தவிப்பதாக தெரிகிறது
















