செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் உலகளாவிய முயற்சிகளையும், அதன் தலைமைப் பண்பையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
டெல்லியில் வரும் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த உச்சிமாநாட்டை முன்னின்று நடத்துவதற்காக இந்தியாவைப் பாராட்டிய அவர், வளரும் நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள இந்த மாநாடு ஒரு பாலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
















