தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து, வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மகளிர் அணியினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில மகளிர் அணித் தலைவி கவிதா ஸ்ரீகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போதைப்பொருள் கலாச்சாரத்தால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிய கவிதா ஸ்ரீகாந்த், இதில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
















