தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்குமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் எனவும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்க மத்திய அரசு நிதியளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் தமிழகத்திற்கென புதிய ரயில் திட்டங்களை மத்திய அரசு தொடங்க வேண்டும் எனவும், அதற்காக 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் அளவிலான நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
















