விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரிஏய்ப்பு செய்ததே சாட்சி என தெரிவித்துள்ளார்.
விஜய் ஊழல்வாதி என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது என்றும்,கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.செங்கோட்டையன் செல்லாத நோட்டு, அவரை பற்றி பேசி எந்த பயனும் இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
















