செங்கல்பட்டு மாவட்டம் அகரம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயின் குறுக்கே திமுக கவுன்சிலர் மண்ணை கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கஸ்பாபுரம் பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் கோமலா வெங்கடேசனுக்கு, கமிஷன் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கவுன்சிலரின் உத்தரவுப்படி, லாரியில் மண் கொண்டுவரப்பட்டு, கால்வாயில் குறுக்கே கொட்டப்படுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















