சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சார்பில் ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் 196 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.
திறப்பு விழா முடிந்து பல நாட்களாகியும், இன்றுவரை அந்த வீடுகளின் சாவிகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி, பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















