முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னையை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வேப்பேரியில் உள்ள உணவு கூடத்தில் காலை உணவு சமைக்கப்படுகிறது.
இந்த கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர்க்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியதுடன் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
















