மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இருப்பவர் சீத்தாராமன்.
இவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளரான ஜெய்பாலாஜி, தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்து மோசடி செய்ததாக கூறி மதுரை மத்திய குற்றப்பரிவு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதன் அடிப்படையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெய் பாலாஜியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் ஜெய் பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
















