தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கூடல் பகுதியில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது கொலை மிரட்டல் விடுத்த ரத்தினவேல் வனத்துறை அதிகாரி முருகன் என்பவரை துரத்தி சென்று தாக்க முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கல்குவாரிக்கு சென்று பணிகளை நிறுத்தியதோடு 4 பேரை கைது செய்தனர்.
















