கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலின் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் யானை, மயில், காளை ஆகியவற்றில் குழந்தை வேலப்பர் தேர் பவனியானது நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அப்போது, தேரின் முன்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, இரட்டை வடம் பிடித்து பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி, தேரினை நான்கு ரத வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில், வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர்களைத் தூவி வழிபட்டனர்.
இந்த விழாவில் கொடைக்கானல் சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏரளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
















