கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்ட மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















