திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெற்றது
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், 21ஆவது ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
நாட்டியாஞ்சலியை கோயில் நிர்வாக அலுவலர், குத்து விளக்கேற்றி தொங்கி வைத்தார்.
இதில் புதுச்சேரி மட்டுமின்றி சிங்கப்பூர், துபாய், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்று, பரத நாட்டியம் ஆடினர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















