சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின்போது சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு முழுவதும் பேருந்துகளிலேயே அழைத்துச்சென்று போலீசார் அலைக்கழித்ததாக போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் தாக்குதலில் சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
















