எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் அரசியலை பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
தவெக 2-ம் இடம் பிடிக்கும் என்பதை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முடிவு செய்ய முடியாது என்றும், “தேர்தலில் எந்த கட்சி எந்த இடத்தை பிடிக்கும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது காட்டு தர்பார் ஆட்சி என்றும் இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
















