பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக எம்.பி. ராகவ் சதா புகழாரம் சூட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஸ்வாதி மாலிவால், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி, ஹர்பஜன் சிங் ஆகிய 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்தநிலையில் ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய மூன்று எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து ராகவ் சதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சொந்த கட்சியினரே எங்களது குரலை ஒடுக்கியதாகவும், ஒரு நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக புகழாரம் சூட்டினார்.
















