பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில், அவரது உடலுக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னர் மற்றும் தயாரிப்பாளர் என பல்துறைகளில் வலம் வந்த பாக்யராஜ் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 73 வயதான நடிகர் பாக்யராஜ் நடிகை குஷ்பூவின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில் காலை வழக்கம் போல நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாக்யராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலகினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோகத்துடன் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாக்யராஜின் பூத உடலுக்கு நாளை காலை 10.45 மணி முதல் 11.45-க்குள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.















