அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து துறை முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊழல் குறித்த புகார்களை சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திற்கு அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒன்பது நான்கு ஒன்பது எட்டு ஒன்று எட்டு பூஜ்ஜியம் ஒன்பது மூன்று ஆறு என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளின் இணைய பக்கங்களிலும் இதுதொடர்பான வாசகங்கள் இடம்பெற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















