ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?
Sep 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர். இருவருக்கும் என்ன தொடர்பு? உண்மையிலேயே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா ஆர்ம்ஸ்ட்ராங்? விரிவாக பார்க்கலாம்.

சென்னை பெரம்பூரில் தமது வீட்டுக்கு அருகிலேயே 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங். இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி BOY உடையணிந்து வந்தவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலைதான் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.

ஒருவாரமாக ஆர்ம்ஸ்ட்ராங் வீடு அருகே ஆட்டோவை நிறுத்துவது போல திருமலை நோட்டம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங் எப்போது எப்படி வருகிறார்? எவ்வளவு நேரம் அங்கு இருக்கிறார்? அவரோடு எத்தனை பேர் வருகிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்து சொன்னவர் திருமலை என்கிறது காவல்துறை வட்டாரம்.

எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இதற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

முழு விவரம் தெரிந்த பிறகே அனைத்து தகவல்களையும் சொல்லுவோம் என்று காவல் ஆணையர் கூறினாலும், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர் பலமாக அடிபடுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சுரேஷின் சகோதரர் புன்னை பாலு சரண் அடைந்திருப்பதே அதற்கு காரணம். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ்.

முப்பதுக்கும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ், அரசு ஊழியராக தமது வாழ்க்கையை தொடங்கியவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் காவலராக பணிபுரிவதற்காக ஆற்காட்டிலிருந்து சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு வந்தார் சுரேஷ். அரசு வேலையோடு சேர்த்து கந்துவட்டிக்கும் கடன் கொடுத்ததால் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் வரிசைகட்டத் தொடங்கின. 1998-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சுரேஷுக்கு ரவுடிகளின் தொடர்பு கிடைத்தது.

ஆள்கடத்தலை தொடர்ந்து செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் சுரேஷின் NETWORK ஆந்திரா வரை நீண்டது. தனி கூலிப்படையுடன் அட்ராசிட்டியைத் தொடங்கிய சுரேஷ் அதன் பலனாக பிற ரவுடிகளின் பகையையும் கொலை வழக்குகளையும் பெற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெண் தாதா கஞ்சா அஞ்சலையுடன் சுரேஷுக்கு தொடர்பு இருந்தது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியுமான தென்னரசுவுக்கும் சுரேஷுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2010-ஆம் ஆண்டு தென்னரசுவின் கூட்டாளியான ரவுடி சின்னாவையும், வழக்கறிஞர் பகத்சிங் என்பவரையும் கொலை செய்தார் ஆற்காடு சுரேஷ்.

அதற்கு பழிவாங்குவதற்காக சுரேஷின் நண்பரான வெள்ளை உமா என்பவரை தென்னரசு தரப்பு கொலை செய்தது. அதனைத் தொடர்ந்து 2015-ல் குடும்பத்தினர் முன்னிலைலேயே தென்னரசுவின் முகத்தை சிதைத்து கொலை செய்தது சுரேஷ் தரப்பு. 8 ஆண்டுகள் கழித்து 2023-ல் சென்னை பட்டினப்பாக்கத்தில் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ். தென்னரசுவின் சகோதரர் ரவுடி பாம் சரவணன்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சுரேஷ் கொலையில் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு தொடர்பு இருக்கலாம் என அவரது கூட்டாளிகள் சந்தேகித்ததாக தெரிகிறது. இதற்கிடையே சுரேஷின் நண்பரான ரவுடி மாதவனும் கொல்லப்பட்டது அவரது ஆதரவாளர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5-ஆம் தேதி ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்து தங்கள் பழியை அவர்கள் தீர்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

Tags: What is the background of Armstrong's brutal murder?
Share
Tweet
SendShare
Previous Post

கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!

Next Post

பிரிட்டன் தேர்தல் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்!

Related News

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வலதுகரம் Cai Qi : உற்றுநோக்கப்படும் இந்திய வருகை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies