நமீபியாவில் கடும் வறட்சி - பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமீபியாவில் கடும் வறட்சி – பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வனவிலங்குகளை வேட்டையாடலாம் என்கிற முடிவை நமீபியா அரசு எடுத்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஏன் இந்த நிலைமை என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்பிரிக்கா கண்டத்தில் நான்காவது பெரிய நதியான ஜாம்பாசி நதியை ஒட்டியுள்ள நாடுகளுக்கு, கடந்த ஆண்டு தேவையான மழை பொழிவில் 20 சதவீதம் கூட கிடைக்கவில்லை.

தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியா, கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது .

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து, விவசாய நாடான நமீபியா மூன்று முறை வறட்சியால் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

இந்த மோசமான நிலைமையில் இருந்து நமீபியா மீண்டு வருவதற்காக ஐநா 30 லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருக்கிறது.

நமீபியா அரசின் உணவு இருப்பில் 85 சதவீதத்துக்கும் மேல் காலியாகி விட்டது. இதனால் நமீபியாவில் பட்டினியால் குழந்தைகள் இறப்பதும், ஒரு வாய் தண்ணீருக்காக மக்கள் ஏங்குவதும் அன்றாட காட்சியாகி விட்டது.

2.5 மில்லியன் மக்கள் வாழும் நமீபியாவில் கூடிய விரைவில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான பட்டினியால் உயிரிழக்க நேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க நமீபியா அரசு 83 யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல இருப்பதாக தெரியவருகிறது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 வரிக்குதிரைகள், 30 நீர் யானைகள், 50 சிறுமான்கள், 60 காண்டாமிருகங்கள்,100 நீலக் காட்டுமான்கள் மற்றும் 100 மறிமான்கள் கொல்லப் பட இருப்பதாகவும் அதனால் சுமார் 63 டன் இறைச்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே, அரசின் நிவாரணத் திட்டத்திற்காக கொல்லப்பட்ட157 வனவிலங்குகளிலிருந்து 56,875 கிலோ இறைச்சி பெறப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வறட்சியின் காரணமாக தண்ணீரைத் தேடி விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் வருமென்றும் அதனால் மக்களுக்கு ஆபத்து நேரும் என்றும் ,அதனாலேயே இந்த வனவிலங்கு அழிப்பு நடவடிக்கை என்றும் அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய நடவடிக்கைக்கு குடிமக்கள் ஆதரவு தரும்படி மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமீபியா அரசு , அதேவேளையில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களே வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Namibiahunting of wild animalsuffering from hunger and famine.Zambasi River
Share
Tweet
SendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Next Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி – கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies