நமீபியாவில் கடும் வறட்சி - பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!
Jun 19, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமீபியாவில் கடும் வறட்சி – பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வனவிலங்குகளை வேட்டையாடலாம் என்கிற முடிவை நமீபியா அரசு எடுத்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஏன் இந்த நிலைமை என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்பிரிக்கா கண்டத்தில் நான்காவது பெரிய நதியான ஜாம்பாசி நதியை ஒட்டியுள்ள நாடுகளுக்கு, கடந்த ஆண்டு தேவையான மழை பொழிவில் 20 சதவீதம் கூட கிடைக்கவில்லை.

தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியா, கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது .

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து, விவசாய நாடான நமீபியா மூன்று முறை வறட்சியால் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

இந்த மோசமான நிலைமையில் இருந்து நமீபியா மீண்டு வருவதற்காக ஐநா 30 லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருக்கிறது.

நமீபியா அரசின் உணவு இருப்பில் 85 சதவீதத்துக்கும் மேல் காலியாகி விட்டது. இதனால் நமீபியாவில் பட்டினியால் குழந்தைகள் இறப்பதும், ஒரு வாய் தண்ணீருக்காக மக்கள் ஏங்குவதும் அன்றாட காட்சியாகி விட்டது.

2.5 மில்லியன் மக்கள் வாழும் நமீபியாவில் கூடிய விரைவில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான பட்டினியால் உயிரிழக்க நேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க நமீபியா அரசு 83 யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல இருப்பதாக தெரியவருகிறது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 வரிக்குதிரைகள், 30 நீர் யானைகள், 50 சிறுமான்கள், 60 காண்டாமிருகங்கள்,100 நீலக் காட்டுமான்கள் மற்றும் 100 மறிமான்கள் கொல்லப் பட இருப்பதாகவும் அதனால் சுமார் 63 டன் இறைச்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே, அரசின் நிவாரணத் திட்டத்திற்காக கொல்லப்பட்ட157 வனவிலங்குகளிலிருந்து 56,875 கிலோ இறைச்சி பெறப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வறட்சியின் காரணமாக தண்ணீரைத் தேடி விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் வருமென்றும் அதனால் மக்களுக்கு ஆபத்து நேரும் என்றும் ,அதனாலேயே இந்த வனவிலங்கு அழிப்பு நடவடிக்கை என்றும் அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய நடவடிக்கைக்கு குடிமக்கள் ஆதரவு தரும்படி மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமீபியா அரசு , அதேவேளையில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களே வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Namibiahunting of wild animalsuffering from hunger and famine.Zambasi River
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Next Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி – கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு!

Related News

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies