நமீபியாவில் கடும் வறட்சி - பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!
Jun 9, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமீபியாவில் கடும் வறட்சி – பட்டினி மரணங்களை தடுக்க வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வனவிலங்குகளை வேட்டையாடலாம் என்கிற முடிவை நமீபியா அரசு எடுத்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஏன் இந்த நிலைமை என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்பிரிக்கா கண்டத்தில் நான்காவது பெரிய நதியான ஜாம்பாசி நதியை ஒட்டியுள்ள நாடுகளுக்கு, கடந்த ஆண்டு தேவையான மழை பொழிவில் 20 சதவீதம் கூட கிடைக்கவில்லை.

தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியா, கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது .

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து, விவசாய நாடான நமீபியா மூன்று முறை வறட்சியால் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

இந்த மோசமான நிலைமையில் இருந்து நமீபியா மீண்டு வருவதற்காக ஐநா 30 லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருக்கிறது.

நமீபியா அரசின் உணவு இருப்பில் 85 சதவீதத்துக்கும் மேல் காலியாகி விட்டது. இதனால் நமீபியாவில் பட்டினியால் குழந்தைகள் இறப்பதும், ஒரு வாய் தண்ணீருக்காக மக்கள் ஏங்குவதும் அன்றாட காட்சியாகி விட்டது.

2.5 மில்லியன் மக்கள் வாழும் நமீபியாவில் கூடிய விரைவில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான பட்டினியால் உயிரிழக்க நேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க நமீபியா அரசு 83 யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல இருப்பதாக தெரியவருகிறது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 வரிக்குதிரைகள், 30 நீர் யானைகள், 50 சிறுமான்கள், 60 காண்டாமிருகங்கள்,100 நீலக் காட்டுமான்கள் மற்றும் 100 மறிமான்கள் கொல்லப் பட இருப்பதாகவும் அதனால் சுமார் 63 டன் இறைச்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே, அரசின் நிவாரணத் திட்டத்திற்காக கொல்லப்பட்ட157 வனவிலங்குகளிலிருந்து 56,875 கிலோ இறைச்சி பெறப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வறட்சியின் காரணமாக தண்ணீரைத் தேடி விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் வருமென்றும் அதனால் மக்களுக்கு ஆபத்து நேரும் என்றும் ,அதனாலேயே இந்த வனவிலங்கு அழிப்பு நடவடிக்கை என்றும் அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய நடவடிக்கைக்கு குடிமக்கள் ஆதரவு தரும்படி மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமீபியா அரசு , அதேவேளையில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களே வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: Namibiahunting of wild animalsuffering from hunger and famine.Zambasi River
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Next Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி – கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு!

Related News

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies