விவசாயிகளுக்கு நடப்பு சம்பா பருவத்தில் புதிய பயிர்க்கடன் வழங்குவதில் எந்தவித தடையும் இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஸ்வநாதன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுப் பணிகள் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை இன்னும் வெளியாகாத நிலையில், நடப்பு சம்பா பருவத்திற்கு புதிய கடன் வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என்றும், முதலமைச்சர் அறிவித்த தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும் எனவும் கூறினார். மேலும், வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
















