ஊழல் மற்றும் வாரிசு அரசியல் சாமானிய மக்களின் நலனுக்கு அநீதி இழைத்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
Mar 30, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் சாமானிய மக்களின் நலனுக்கு அநீதி இழைத்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

சில கட்சிகள் சாமானிய மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி  குற்றம் சாட்டினார்.

Murugesan M by Murugesan M
Jul 18, 2023, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில்
ரூ710 கோடி மதிப்பில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றினார். அப்போது பேசியவர்.,

வீர் சாவர்கர் சர்வதேவ விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருப்பதால் ஒட்டுமொத்த தேசமும் இந்த யூனியன் பிரதேசத்தை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்களின் உற்சாகமான சூழலையும் மகிழ்ச்சியான முகங்களையும் காண்கின்றேன்.
ஒரே  நேரத்தில் 10 விமானங்ளை நிறுத்த முடியும் என்ற  நிலையில்  கூடுதலான விமானப் போக்குவரத்து ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால்  இந்தப் பகுதியில் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடந்த 9 ஆண்டுகளில்,  தற்போதுள்ள அரசு, காங்கிரஸ் அரசுகளின் தவறுகளை உணர்வுபூர்வமாக சரிசெய்து வருவது மட்டுமின்றி புதிய நடைமுறையையும் வகுத்துள்ளது.   “இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதிய மாதிரி உருவாகியுள்ளது. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்று தெரிவித்தார்.
அனைத்து பிராந்தியங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வளர்ச்சியையும், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

முந்தைய காங்கிரஸ் அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் ரூ.23,000 கோடி நிதியைப் பெற்ற நிலையில், பாஜக அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  முந்தைய காங்கிரஸ் அரசின் 9 ஆண்டுகளில் 28,000 வீடுகள், குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50,000 ஆகியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது அந்தமான் நிக்கோபாரில் உள்ள அனைவரும் வங்கிக்கணக்கை வைத்திருப்பதோடு, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற வசதியையும் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த யூனியன் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையில், போர்ட்பிளேரில் மருத்துவக் கல்லூரி அமைந்ததற்கு தற்போதைய அரசே பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இணையதள வசதிக்கு செயற்கைக் கோள்களையே நம்பியிருக்க வேண்டிய நிலையிருந்தது. தற்போதுள்ள அரசு பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் முன்முயற்சியை மேற்கொண்டது.

இவ்வாறு விரிவுப் படுத்தப்பட்ட வசதிகள்  சுற்றுலாவிற்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் கூறினார். செல்பேசி இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, விமானநிலைய வசதிகள், சாலைகள் முதலியவை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருவதை ஊக்குவிக்கின்றன.

இதனால்தான், 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. சாகச சுற்றுலாவுக்கும் வரவேற்பு கிடைத்து வருவதோடு, வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

“வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இணைந்த சீரான முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தின் வாழும் உதாரணமாக அந்தமான் விளங்குகிறது”. செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பே அந்தமானில் ஏற்றப்பட்டாலும், தீவுப் பகுதியில் அடிமைப் போக்கின் சின்னங்களே காணப்பட்டதாக பிரதமர் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய அதே இடத்தில், கொடியேற்றும் வாய்ப்பு தமக்கும் கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ராஸ் தீவை நேதாஜி சுபாஷ் தீவு என்றும், ஹாவ்லாக் தீவை ஸ்வராஜ் தீவு என்றும் நீல் தீவை ஷாகித் தீவு என்றும் தற்போதைய அரசு பெயர் மாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயர்களை சூட்டியது பற்றியும் அவர் பேசினார். “அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வளர்ச்சி, நாட்டு இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் ஆதார சக்தியாக மாறி உள்ளது”, என்றார்.

இந்தியர்களின் திறனின் மீது தமக்குள்ள அதீத நம்பிக்கையைக் குறிப்பிட்டு, கடந்த 75 ஆண்டுகாலத்தில் சுதந்திர இந்தியா புதிய உயரத்தை நிச்சயம் எட்டி இருக்கும் ஆனால்,
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் போன்றவை சாமானிய மக்களின் நலனுக்கு எப்போதுமே அநீதி இழைத்ததாக தெரிவித்த அவர், சில கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலையும் சுட்டிக்காட்டினார். சாதி மற்றும் ஊழல் சார்ந்த அரசியலையும் விமர்சித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தண்டனை பெற்ற  அல்லது  பிணையில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கையும்  சாடினார்.

அரசியலமைப்பைப்  பிணையக் கைதியாக வைத்திருக்கும் மனநிலையையும் அவர் தாக்கிப் பேசினார். இது போன்ற சக்திகள், சாமானிய மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், குடும்ப சுயநல ஆதாயத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பாதுகாப்பு மற்றும் புத்தொழில்கள் துறையில் இந்திய இளைஞர்களின் திறமைக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என கூறினார்.

 

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் 

Next Post

ஆடி மாதத்தில் சுப நிகழ்வுகள் குறைவு – காய்கறி விலை சரிய வாய்ப்பு

Related News

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

100 சதவீத வாக்குப்பதிவு – ஆமை வடிவத்தில் மணற்சிற்பம் அமைத்து விழிப்புணர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies