பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!
Sep 6, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோ.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, தங்கள் நாட்டுக்கு வரும்படி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் “பிரிக்ஸ்” உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து கிரீஸ் செல்ல பிரதமர் மோடி முடிவு செய்தார். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பவதற்கு முன்பு, கிரீஸ் பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், “கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறேன். இந்தப் பழமைவாய்ந்த பூமிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.

இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெருமையும் எனக்கு உண்டு. நமது இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலானவை. நவீன காலத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கிரேக்கத்திற்கான எனது பயணம் நமது பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இன்று காலை கிரீஸ் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. ஏதென்ஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படியும், அரசு மரியாதையுடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிரீஸ் அதிபர் கத்ரீனா என். சகெல்லரோபவுலோவை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான “கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்” விருதை அந்நாட்டின் அதிபர் கத்ரீனா சகெல்லரோபவுலு வழங்கினார். இந்த விருது கிரீஸ் நாட்டின் 2-வது உயரிய விருதாகும். பொதுவாக, இந்த விருது கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தலைவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, தற்போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கிரீஸ் நாட்டுத் தரப்பில் கூறுகையில், ‛‛இந்திய மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் துணிச்சலாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மீது கிரீஸ் மக்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1983-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். அதன் பிறகு, 40 ஆண்டுகள் கழித்து தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Next Post

பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!

Related News

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies