பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!
Feb 11, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோ.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, தங்கள் நாட்டுக்கு வரும்படி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் “பிரிக்ஸ்” உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து கிரீஸ் செல்ல பிரதமர் மோடி முடிவு செய்தார். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பவதற்கு முன்பு, கிரீஸ் பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், “கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறேன். இந்தப் பழமைவாய்ந்த பூமிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.

இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெருமையும் எனக்கு உண்டு. நமது இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலானவை. நவீன காலத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கிரேக்கத்திற்கான எனது பயணம் நமது பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இன்று காலை கிரீஸ் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. ஏதென்ஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படியும், அரசு மரியாதையுடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிரீஸ் அதிபர் கத்ரீனா என். சகெல்லரோபவுலோவை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான “கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்” விருதை அந்நாட்டின் அதிபர் கத்ரீனா சகெல்லரோபவுலு வழங்கினார். இந்த விருது கிரீஸ் நாட்டின் 2-வது உயரிய விருதாகும். பொதுவாக, இந்த விருது கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தலைவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, தற்போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கிரீஸ் நாட்டுத் தரப்பில் கூறுகையில், ‛‛இந்திய மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் துணிச்சலாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மீது கிரீஸ் மக்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1983-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். அதன் பிறகு, 40 ஆண்டுகள் கழித்து தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Next Post

பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!

Related News

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies