வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் புதிய சட்டங்களை இயற்றும்படி மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி பரப்புதலை கட்டுப்படுத்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி பரப்புதலை கட்டுப்படுத்த போதிய சட்டங்கள் இருந்தும் அதனை செயல்படுத்துவதிலேயே தொய்வு உள்ளதாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் சட்டத்தை விளக்கலாமே தவிர, அவை சட்டத்தை இயற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
ஆகையால், வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி பரப்புதலை தடுக்க புதிய சட்டங்கள் இயற்ற உத்தரவிடக் கோரிய பொதுநலமனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
















