தகுதியானவர்களுக்கு VB-G RAM G திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
‘இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், VB-G RAM G என்ற சிறப்புமிக்க திட்டத்தினை கொண்டு வந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு அவ நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (VB-G RAM G) கீழ், ₹507.92 கோடி நிதி மதிப்பீட்டில், தமிழகம் முழுவதும் 10,185 நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள் துவங்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட VB-G RAM G திட்டத்தினை, தவெக அரசு எவ்வித தடையுமின்றி, முறையாக செயல்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், பணிக்கு வருபவர்களுக்கான வருகைப் பதிவேடுகள் (Biometric) முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் இன்றி, பணியாளர்களின் ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில், தகுதியானவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















