வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒன்றாவது கொண்ட ஊசி வளைவு பகுதியில் அவர்கள் பயணித்த வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த சிறார்கள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக வால்பாறை மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















