சென்னையில் லஞ்சம் வாங்கிய புகார்களில் 5-க்கும் மேற்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்படி சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராஜ், 100 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் பென்ஷன் பிரிவில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் சக்திவேல், ஓய்வூதிய தொகையை அனுப்புவதற்கு லஞ்சம் கேட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
5-க்கும் மேற்பட்ட போலீசார் மீது துறை ரீதியான விசாரணை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன…
















