சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு மற்றும் அமலாக்க அறக்கட்டளையின் 3-வது உயர்மட்ட கண்காணிப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய கீர்த்தனா, சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் இத்திட்டம் நிறைவேறினால், அவ்வழியில் உள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் எனவும் கூறினார்.
















