தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டால் அவமதிக்கப்படுவதாக யார் கூறியது என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், ஆளுநர் அர்லேகர், நாகை எம்பி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன், Viksit Bharat 2047 என்ற இலக்கை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் முதலில் பாடப்படவில்லை என கேட்கின்றனர் எனவும் அப்படியென்றால், தேசிய பாடலை அவமதிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பினார்…
















