ஹோர்முஸ் விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால், அந்நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக, ஓமன் மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, ஈரான் கடல் பகுதி வழியாக கப்பல்கள் நுழையவும், ஓமன் அருகே உள்ள கடல் பகுதி வழியாக வெளியேறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்திருப்பது அதிபர் டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















