தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
விழாவில் உரையாற்றிய அவர்,தமிழ் மாதமான ஆடி மாதத்தில் தஞ்சாவூருக்கு வருவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், காவிரி அன்னைக்கு வணக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
ஆடிப்பெருக்கு திருச்சியில் குழாய் நீரால் கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இறைவன் நல்லவர்களை சோதிப்பாரே தவிர ஒருபோதும் கைவிடமாட்டார் என்றும், விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
காவிரி வெறும் நதி அல்ல என்றும், தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம், வேளாண்மை மற்றும் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த உயிர்நாடி என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், இளைய சமுதாயம் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக வருத்தம் தெரிவித்தார். விழாவின் நிறைவாக மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
















