தஞ்சையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த நிலையில் அவர்மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசிக மாநில மாநாட்டை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரை ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மறியலை மீறி இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தடுக்க வந்த போலீசாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது இளைஞர் ஒருமையில் பேசிய நிலையில், ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பதிலுக்கு SSI -ஐ கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார், உடனே அந்த இளைஞரைப் பிடித்து, இழுத்து சென்று கைது செய்தனர்.
















