தமிழகத்துக்கு மே மாதத்தில் 2.5 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைப்பெற்றது.
அப்போது தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் பற்றிய புள்ளி விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், மே மாதம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க கோரினர்.
அதனை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், மே மாதத்தில் 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டார்.
















