தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என, ஜேவிசி டைம்ஸ் நவ், சி,என்,என் 18 வோட் வைப் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி,
தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என, ஜேவிசி டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்களும், தவெக 8 முதல் 15 இடங்களும் கைப்பற்றும் என்றும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தைகூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் ஜேவிசி டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சி,என்,என் 18 வோட் வைப் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், என்.டி.ஏ கூட்டணி 114 முதல் 124 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 103 முதல் 113 இடங்களும், தவெக 4 முதல் 10 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் மேட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. கூட்டணி 87 முதல் 110 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்கள் வரையும், தவெக 10 முதல் 12 இடங்கள் வரையும் கைப்பற்றக்கூடும் என்றும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















