பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரியவந்துள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவியின் பீப்பில்ஸ் பல்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளையும், தவெக 18 முதல் 24 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், நாதகவிற்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருக்கிறது.
சாணக்யா நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளையும், தவெக 13 முதல் 18 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது.
Republic டிவியின் பி மார்க் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகளையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், நாதகவிற்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
















