டெல்லி: காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை!
Jul 28, 2026, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி: காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் செயற்கை மழை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

கடந்த சில ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலை, வானங்களிலிருந்து வெளியேறும் புகை, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், நவம்பர் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் டெல்லியில் செயற்கை மழை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது, செயற்கை மழை குறித்த ஆராய்ச்சி இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை. தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சில முயற்சிகள் நடந்துள்ளன.

உலகளவில், செயற்கை மழை பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. செயற்கை மழை பொழிய வைப்பதற்கு ஈரப்பதம் மற்றும் மேகங்கள் வேண்டும். இவை இருந்தால், மட்டுமே செயற்கை மழை வரும் என்று கூறினார். செயற்கை மழை வரவழைப்பதற்கு, மேகங்கள் மீது சில இரசாயனப் பொருட்களைப் போடுவார்கள். இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையைப் பொழிய வைக்கும்.

இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் செயற்கை மழை வரவழைக்கப்பட்டது. இதன் காரணமாக, காற்று மாசுபாடு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.

Tags: delhi air pollution
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Next Post

மக்களே உஷார்!: இந்த 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies