9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!
Jul 29, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 4-ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கேள்வி நேரம் நடந்து வரும் நிலையில், விமானக் கட்டணம் அதிகரிப்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார்.

அப்போது, “கடந்த 2014-ல் 6 கோடி போ் விமானத்தில் பயணித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்ந்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும். விமானத் துறை எதிா்காலத்தில் 3 மடங்கு வளா்ச்சி காணும். இந்திய ரயில்வேயின் குளிா்சாதன வசதி (ஏ.சி.) முதல் வகுப்பு பெட்டிக்கு இணையாக விமானக் கட்டணம் உள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, விடுமுறை மற்றும் விழாக் காலங்களிலும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சூழலிலும் விமானக் கட்டணம் அதிகரிக்கிறது. ஆகவே, விமான நிறுவனங்களின் ‘நியாயமான விலை’ குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, “விமானப் போக்குவரத்து ஒரு பருவகாலத் துறை என்பதால் கட்டணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் இந்நிலை காணப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை கட்டணக் கண்காணிப்புப் பிரிவைக் கொண்டிருக்கிறது.

இது தற்செயல் அடிப்படையில் 60 வழிதடங்களைக் கண்காணித்து வருகிறது. முன்கூட்டியே நீங்கள் விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்காது. அதோடு, விமான நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 55,000 கோடி முதல் 1.30 லட்சம் கோடி ரூபாய்வரை இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று விமான நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பாதித்திருக்கிறது. விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இயக்கச் செலவில் எரிபொருளின் பங்கு 40 சதவீதம். தற்போது இதன் விலை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. எனினும், அதற்காக விமானக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை” என்றார்.

Tags: ParliamentJyotiraditya Scindia
ShareTweetSendShare
Previous Post

சாமானிய மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி! -இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Next Post

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies