9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!
Jun 14, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 4-ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கேள்வி நேரம் நடந்து வரும் நிலையில், விமானக் கட்டணம் அதிகரிப்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார்.

அப்போது, “கடந்த 2014-ல் 6 கோடி போ் விமானத்தில் பயணித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்ந்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும். விமானத் துறை எதிா்காலத்தில் 3 மடங்கு வளா்ச்சி காணும். இந்திய ரயில்வேயின் குளிா்சாதன வசதி (ஏ.சி.) முதல் வகுப்பு பெட்டிக்கு இணையாக விமானக் கட்டணம் உள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, விடுமுறை மற்றும் விழாக் காலங்களிலும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சூழலிலும் விமானக் கட்டணம் அதிகரிக்கிறது. ஆகவே, விமான நிறுவனங்களின் ‘நியாயமான விலை’ குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, “விமானப் போக்குவரத்து ஒரு பருவகாலத் துறை என்பதால் கட்டணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் இந்நிலை காணப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை கட்டணக் கண்காணிப்புப் பிரிவைக் கொண்டிருக்கிறது.

இது தற்செயல் அடிப்படையில் 60 வழிதடங்களைக் கண்காணித்து வருகிறது. முன்கூட்டியே நீங்கள் விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்காது. அதோடு, விமான நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 55,000 கோடி முதல் 1.30 லட்சம் கோடி ரூபாய்வரை இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று விமான நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பாதித்திருக்கிறது. விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இயக்கச் செலவில் எரிபொருளின் பங்கு 40 சதவீதம். தற்போது இதன் விலை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. எனினும், அதற்காக விமானக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை” என்றார்.

Tags: ParliamentJyotiraditya Scindia
ShareTweetSendShare
Previous Post

சாமானிய மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி! -இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Next Post

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies