ஐ.நா. போர் நிறுத்த தீர்மானம்: வீட்டோவை பயன்படுத்தி முறியடித்த அமெரிக்கா!
Apr 29, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. போர் நிறுத்த தீர்மானம்: வீட்டோவை பயன்படுத்தி முறியடித்த அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை அமெரிக்கா முறியடித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக மக்களை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் இராணுவம். இத்தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், காஸாவில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டி இருக்கிறது.

இதனிடையே, இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் கோரி, இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பொதுசபையில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த நிலையில், அமெரிக்கா உட்பட 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

ஆனால், இஸ்ரேல் இத்தீர்மானத்தை நிராகரித்தது. போர் நிறுத்தம் என்பது தீவிரவாதத்திடம் சரணடைவது போலாகும். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆகவே, போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக முதலில் 4 நாட்களும், பிறகு 2 நாட்களும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, 65-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு, தங்கள் நாட்டு சிறையில் இருந்த 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.

இது ஒருபுறம் இருக்க, வான்வழித் தாக்குதலில் வடக்கு காஸாவை உருக்குலைத்த இஸ்ரேல், தற்போது தெற்கு காஸாவிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. கான்யூனிஸ் நகரைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான், காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில், இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் இருக்கும் நிலையில், இத்தீர்மானம் ஹமாஸ் அமைப்பின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை முறியடித்திருக்கிறது.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் வுட் கூறுகையில், “நீடித்த அமைதிக்கு இரு நாடுகளின் தீர்வைக் காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர்.

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியைத் தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: americaresolutionisrael hamas warU.N. Council
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Next Post

மணலி ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies