குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி!
Jul 28, 2026, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இன்று நடந்த சம்பவங்களுக்குக் காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.

நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த பொழுதே பார்வையாளர் மாடத்திலிருந்து 2 பேர் அவைக்குள்ளே எட்டிக் குதித்துக் கோசம் எழுப்பி, வண்ணப் புகைக்குண்டை வீசியிருக்கிறார்கள், அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் முழக்கமிட்டிருக்கிறார்கள். பல அடுக்குப் பாதுகாப்புக் கொண்ட இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் அவர்களால் எப்படிச் செல்ல முடிந்தது? அவர்களுடைய நோக்கம் என்ன? என்பது குறித்துப் புலனாய்வு அமைப்புகள் மூலமாக விசாரிக்க வேண்டும்.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதம் தாங்கிய குழு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அதே தினத்தன்று இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது, இச்சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலாகப் பார்க்காமல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.

பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி எப்படி அவர்கள் உள்ளே சென்றார்கள்? பார்வையாளர்கள் மாடத்திலிருந்து எப்படி குதித்தார்கள்? வண்ணப் புகை குண்டை எப்படி உள்ளே எடுத்துச் சென்றார்கள்? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

எனினும் உண்மை நிலை கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவையும் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: NEW PARLIMENT BUILDINGdr. krishnasamy
ShareTweetSendShare
Previous Post

விஜய் ஹசாரே : தமிழக அணிக்கு 294 ரன்கள் இலக்கு!

Next Post

இந்தியர்களுக்கு இனி ‘மிகக் குறுகிய காலத்தில்’ விசா வழங்கபடும் : ஜெர்மன் தூதர்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies