வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு - 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!
Sep 12, 2026, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு – 2 பேரை தட்டித்தூக்கிய கோவை போலீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 -ம் தேதி வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பீளமேடு – வடகோவை இரயில் நிலையம் இடையே , மர்ம நபர்கள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில், இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இது குறித்து, இரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, இரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 7 -ம் தேதி அன்று வந்தே பாரத் இரயில் மீது கல் வீசியது இவர்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் பெயர் சரவணன் (வயது28) மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் பெயர் ஜெகதீஷ் (வயது23) இவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags: vande bharat trainStone peltingcoimbator policetwo arrest
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையின் 5-ம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை!

Next Post

தலைமறைவான சின்னத்திரை நடிகர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies