2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ஆய்வு ஆகியவை இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை வென்றிருக்கின்றன.

மத்திய கலாச்சாரத்துறை ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள், 24 மொழிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைகள் மற்றும் 1 இலக்கிய ஆய்வு ஆகியவை இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளை வென்றிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர் ராஜசேகரன் தனது “நீர்வழி படூம்” நாவலுக்காகவும், தெலுங்கு எழுத்தாளர் பதஞ்சலி சாஸ்திரி தனது சிறுகதைத் தொகுப்பிற்காகவும், மலையாள இலக்கியவாதி ஈ.வி.ராமகிருஷ்ணன் மலையாள நாவலின் தேசகாலங்கள் என்ற இலக்கிய ஆய்வுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, டோக்ரியில் விஜய் வர்மா, குஜராத்தியில் வினோத் ஜோஷி மற்றும் ஒடியாவில் அசுதோஷ் பரிதா ஆகியோர் தங்கள் கவிதைத் தொகுப்புகளுக்காக விருது பெறுகிறார்கள். அசாமிய மொழியில் பிரணவ்ஜோதி தேகா, போடோவில் நந்தீஸ்வர் டைமரி மற்றும் சந்தாலியில் தரசீன் பாஸ்கி ஆகியோர் சிறுகதைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், சஞ்சீவ் தனது இந்தி நாவலான முஜே பஹச்சானோவுக்கு சாகித்ய அகாடமி விருதையும், ராக ஜாங்கியில் ஆங்கில நாவல் ரிக்விம்க்காக நீலம் சரண் கௌருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்து அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

பொறிக்கப்பட்ட செப்புப் தகடு, சால்வை மற்றும் 1 லட்சம் ரூபாய் அடங்கிய கலச வடிவில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய 5 ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2017 மற்றும் 2021 டிசம்பர் 31-க்கு இடையில் முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பானவையாகும்.

Tags: announcedSahitya Akademi awards 2023Tamil author RajasekaranNeervazhi Padooumnovel
ShareTweetSendShare
Previous Post

புதிய வகை கொரோனா பரவல் அதிகரிப்பு!

Next Post

மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எல். முருகன் நன்றி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies