மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு!
Jul 28, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜன்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி-யின் ஜெர்சி எண் 10-க்கு அந்நாட்டு கால்பந்து வாரியம் ஓய்வை அளித்துள்ளது.

கிரிக்கெட் என்று சொன்னாலே இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் நினைவில் வருது போன்று கால்பந்து என்று சொன்னாலே நம் நினைவில் வருவது அர்ஜென்டினா தான் அதற்கு முக்கிய முக்கிய காரணம் என்றால் லியோனல் மெஸ்ஸி தான்.

ஆம், அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் தான் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

1986-க்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா அணியை தலைமை தாங்கி உலகக் கோப்பை பெற்று தந்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணியில் 1980களில் ஸ்டார் வீரராகவும், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட டியாகோ மரடோனா இருந்தார். அவர் 1986 உலகக் கோப்பை தொடரை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

மரடோனா போல் உலக அளவில் புகழ்பெற்ற வீரராக இருந்து வரும் மெஸ்ஸி, மரடோனாவை போன்ற அணிக்கு தலைமை தாங்கி நீண்ட நாள் கனவான உலகக் கோப்பையையும் பெற்று தந்தார்.

இதையடுத்து லியோனல் மெஸ்ஸி அடுத்த உலகக் கோப்பை தொடர் விளையாடுவது சந்தேகம் என்று இருந்து வரும் நிலையில், அவர் அணிந்திருக்கும் ஜெர்சி எண் 10-யை இனி வேறொரு வீரர் அணியாதபடி, அதற்கு ஓய்வு அளிக்க அர்ஜெண்டினா கால்பந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் கிளாடியோ டாபியா கூறியதாவது, “தேசிய அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பின்னர், அவர் அணிந்த ஜெர்சி எண் 10-யை வேறு எந்த வீரரும் அணிவதற்கு அனுமதிக்க மாட்டோம். மெஸ்ஸிக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இது நாங்கள் அவருக்கு செய்யும் சிறிய விஷயமாக உள்ளது

முன்னதாக, அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை பெற்று தந்த ஸ்டார் வீரரான டியாகோ மரடோனா இதே ஜெர்சி எண் 10-யை தான் அணிந்திருந்தார். இதையடுத்து அவருக்கு பெருமை சேர்க்க ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு அளிக்க அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் முடிவு செய்தது.

ஆனால் 2002 உலகக் கோப்பை தொடரின்போது எண் 1 முதல் 23 வரையில் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளை அனைத்து வீரர்களும் அணியலாம் பிபா விதிமுறையில் தெரிவிக்கப்பட்டதால் அப்போது அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தால் இதனை செயல்படுத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஜெர்சி எண்10-யை அணிந்த மெஸ்ஸி, உலகமே வியக்கும் வீரராகவும், பல்வேறு சாதனைகளை படைத்தவராகவும் இருந்து வரும் நிலையில் மரடோனாவை போல் மெஸ்ஸிக்கும் பெருமை சேர்ககும் விதமாக ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: foot ball matchLionel Messi
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவில் குலுங்கிய ஆப்கானிஸ்தான் – மக்கள் அச்சம்!

Next Post

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies