இராமர் கோவில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான்: இக்பால் அன்சாரி!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான்: இக்பால் அன்சாரி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 03:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று இராம ஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், முகலாய மன்னர் பாபர் காலத்தில் இராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. இதையடுத்து, இராம ஜென்ம பூமியை மீட்க இந்துக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1992-ம் ஆண்டு கரசேவையின் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதி கோரி இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இவ்வழக்கில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், இராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழாக்கள் நடைபெற்றன.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், இஸ்லாமியர்களும் அடக்கம்.

அந்த வகையில், இராம ஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரியும் கலந்துகொண்டார். பின்னர், இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இராமர் கோவில் பிரதிஷ்டையில் கலந்துகொண்டது நல்ல அனுபவமாக இருந்தது.

அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதுபோல, சிறிய பிரச்சனைகளுக்காக சண்டைப் போட்டுக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இராமர் தற்போது அயோத்திக்கு வரவில்லை, 1949-ம் ஆண்டே வந்து விட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில் அயோத்தி பிரச்சனை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இராமர் கோவில் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. வேறு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறவில்லை. உண்மையில், இராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க.தான் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இராமர் கோவில் விழாவில் ஒற்றுமையை வலியுறுத்திய மோகன் பகவத் பேச்சை வரவேற்கிறேன். தற்போது இஸ்லாமியர்கள் நன்கு படித்திருக்கிறார்கள். சுயதொழில் புரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு அரசு வேலை எல்லாம் தேவையில்லை” என்றார்.

Tags: Ram TempleAyodyaBabri litigantIqbal ansari
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!

Next Post

உத்தரப்பிரதேச மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies