கைகளை இழந்த பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனை நேரில் சந்தித்து பேசிய சச்சின்!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைகளை இழந்த பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனை நேரில் சந்தித்து பேசிய சச்சின்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது இரண்டு கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த நிகழ்த்திய அவருக்கு செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் தான் சூழ்ந்திருக்கும்.

உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர், பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றளவும் அவருகேற்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சச்சின் கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதேபோல் ஓய்வுக்கு பின் வர்ணனை, பயிற்சி, விளம்பரங்கள், ஆலோசகர் என்று கிரிக்கெட் தொடர்புடைய பல்வேறு பணிகளை சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் அவரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

To Amir, the real hero. Keep inspiring!

It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw

— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024

ஜம்மு காஷ்மீரில் தனது ரசிகளர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தனது இரண்டு கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

இந்நிலையில் அமீர், பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

பின்பு அமீர் அந்த கொண்டு அவர் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார் எனபதை சச்சினுக்கு செய்து காட்டினார். பின்னர் அமீரின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

Tags: sachin tendulkar
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Next Post

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies