மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தள்ளாத வயதிலும் நடந்து வந்து வாக்குப்பதிவு செய்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 108வயது மூதாட்டி பாப்பம்மாள்.
இவருக்கு கடந்தாண்டு இயற்கை விவசாயம் செய்து வந்ததற்காக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இந்த நிலையில் 108வயது மூதாட்டியான பாப்பம்மாள், தேக்கம் பட்டி கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்கு சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் பாட்டியும் வரிசையில் காத்திருந்தார்.
பின்னர், 108 வயது இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தன்னுடைய ஜனநாயக கடமையாற்று விதமாக தன் வாக்கினை பதிவு செய்தார்.