வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பதிவு உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணாக, 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
















