தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, மாலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்தவர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
















