ஈரான் சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு மற்றும் அந்நாட்டு துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை என கடல்வழிப் பாதையில் மோதல் முடிவின்றி தொடா்கிறது. இதனால் ஈரான் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
அதேசமயம் கார்க் தீவில் உற்பதியாகும் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க முடியாமலும் ஈரான் தவித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை நேரடியாக கடலில் வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கார்க் தீவின் கடற்பரப்பு முழுவதும் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கசிவு கடலில் 45 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் செயலால் உலகளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
















